உயிரிழந்த மாணவிக்கு தேகாந்த நிலையில் கலைமாணிப் பட்டம் : பட்டம் பெற்ற பெளத்த துறவி

Sivarathan Sivarajah
1 Min Read
உயிரிழந்த மாணவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழககக் கலைப்பீடத்தில் கல்வி கற்று, கற்கை நெறியைப் பூர்த்தி செய்த பின்னர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவி ஒருவருக்குத் தேகாந்த நிலையில் கலைமாணிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், அமர்வின் போது சுபீனா குணரத்னம் என்ற மாணவி கலைமாணிப் பட்டத்துக்கு உரித்துடையவராக்கப்பட்டமையை உறுதிப்படுத்தி தேகாந்த நிலையில் அவரது பட்டம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை யாழ் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் முறையாக பெளத்த துறவி ஒருவரும் பட்டம் பெற்றுள்ளார் .

எஸ்.இந்திர ரத்தன தேரர் , தமிழில் பட்டப்பின் தகமைச் சான்றிதலை பெற்றுக்கொண்டார்

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *