வரக்காபொல பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்குநேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் ஹெலகல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து கண்டிக்கும், கண்டியிலிருந்து கொழும்பிற்கும் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்களே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்து தொடர்பில் வரக்காபொல பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com