இலங்கையின் முதல் விந்தணு வங்கி திறப்பு: நன்கொடையாளர்களுக்கு அழைப்பு

Aarani Editor
1 Min Read
விந்தணு வங்கி

இலங்கையின் முதல் விந்தணு வங்கி கொழும்பு காசல் வீதி பெண்கள் வைத்தியசாலையில் திறக்கப்பட்டுள்ளது.

கருவுறுதல் சவால்களை எதிர்கொள்ளும் தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்கு புதிய நம்பிக்கையை வழங்கும் வகையில் விந்தணு வங்கி திறக்கப்பட்டுள்ளது.

விந்தணு வங்கி என்பது செயற்கை கருவூட்டல் அல்லது இன்-விட்ரோ கருத்தரித்தல் (IVF) போன்ற கருவுறுதல் சிகிச்சைகளில் பயன்படுத்த தானமாக பெறப்பட்ட விந்தணுக்களை சேகரித்து, சேமித்து, வழங்கும் ஒரு வசதி மையமாகும்

ஆண் மலட்டுத்தன்மை பிரச்சனைகள் உள்ளவர்கள் அல்லது கருத்தரிக்க விரும்பும் தனிப் பெண்கள் உட்பட தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்கு உதவும் வகையில் உலகம் முழுவதும் இவ்வாறான விந்தணு வங்கி செயற்படுகிறது.

கடுமையான தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மையின் கீழ் இந்த சேவை இயக்கப்படும் என கொழும்பு காசல் வீதி பெண்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் அஜித் குமார தண்டநாராயணா தெரிவித்தார்.

நன்கொடையாளர் தனியுரிமை மற்றும் பெறுநரின் இரகசியத்தன்மை ஆகிய இரண்டும் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக நன்கொடை வழங்குவதற்கு முன், நன்கொடையாளர்கள் தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில் இனப்பெருக்க சுகாதார சேவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் வகையில், விந்தணுக்களை தானம் செய்வதன் மூலம் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *