கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 41 பேர் உயிரிழந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் நிலைமை மேலும் தீவிரமடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவில் உள்ள அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் ஹமாஸ் போராளிகள் என எவ்வித பாகுபாடும் இன்றி தாக்குதல்கள் நடாத்தப்படுகிறது .
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என காசா சுகாதார அமைச்சும் , ஐக்கிய நாடுகள் சபையும் கூறுகின்றன.
பல ஆயிரம் பேர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் இருப்பதாக நம்பப்படுகிறது.
காசாவில் இரண்டு மாத போர்நிறுத்தத்தை முடித்துக் கொண்டு, இந்த வாரம் ஹமாஸுடனான தனது போரை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியதால், பலி எண்ணிக்கை அதிகரித்தது.
Link: https://namathulk.com