பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறவுள்ளார்.

Aarani Editor
0 Min Read
பாப்பரசர்

ரோமின் அகோஸ்டினோ ஜெமெல்லி வைத்தியசாலையிலிருந்து பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று வெளியேறவுள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் வத்திக்கானில் உள்ள அவரின் இல்லத்திற்குத் திரும்புவார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

88 வயதான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், கடுமையான சுவாச தொற்று காரணமாக இரட்டை நிமோனியாவுடன் கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நிமோனியாவிற்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்டுள்ள போதிலும் பரிசுத்த பாப்பரசர் முழுமையாக குணமடைய இன்னும் சிறிது காலம் தேவை என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

Link: https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *