உள்நாட்டு போரில் கடுமையான மனித உரிமை மீறல் : கருணா அம்மான், சவேந்திர சில்வா உள்ளிட்ட நால்வருக்கு பிரித்தானியா தடை

Aarani Editor
2 Min Read
தடை

உள்நாட்டு போரில் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்து கருணா அம்மான், சவேந்திர சில்வா உள்ளிட்ட நால்வருக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது.

சட்டத்திற்கு புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும், பாலியல் வன்முறை ஆகியவை குறித்த விடயத்தில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவால் தடை விதித்த நபர்களில் முன்னாள் இலங்கை இராணுவத் தளபதிகள் மற்றும் பின்னர் இலங்கை இராணுவத்தின் சார்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயல்பட்ட துணை இராணுவப் படையான கருணா குழுவைத் தலைமை தாங்கிய முன்னாள் விடுதலைப் புலி இராணுவத் தளபதி ஆகியோர் அடங்குகின்றனர்.

இலங்கையில் மனித உரிமைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைக் கோருவது உட்பட, அவை இன்று சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

பொறுப்பாளர்கள் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் உறுதியளித்ததாகவும் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறப்படுவதை உறுதி செய்வதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்த புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற பிரித்தானிய அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார்.

கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியாவை உள்ளடக்கிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கான முக்கிய குழுவில் உள்ள கூட்டாளர்களுடன் இணைந்து இலங்கையில் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான சர்வதேச முயற்சிகளை பிரித்தானிய நீண்ட காலமாக வழிநடத்தி வருகிறது.

அந்தவகையில் தடைசெய்யப்பட்டவர்கள் விபரம் பின்வருமாறு .

இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வா.

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட.

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜெயசூர்யா;

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன். கருணா அம்மான் என்றும் அழைக்கப்படும் அவர், பின்னர் இலங்கை இராணுவத்தின் சார்பாக செயல்பட்ட துணை ராணுவக் கருணா குழுவை உருவாக்கி வழிநடத்தினார்.

Link: https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *