உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், நாட்டின், நான்கு பகுதிகளில் இருந்து தேர்தல் தொடர்பாக ஆறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிசார் கூறினர்.
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக பொலிசாருக்கு 06 முறைப்பாடுகள் நேற்று கிடைக்கப்பெற்றன.
இதன்படி, இந்த காலகட்டத்தில் தேர்தல் வன்முறை தொடர்பான எந்த முறைப்பாடுகளும் பதிவாகவில்லை எனவும் பொலிசார் தெரவித்தனர்.
மாத்தளையிலிருந்து 03 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிசார் கூறினார்.
மாத்தளையில், வேட்பாளர்களின் படங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கொடிகள் கொண்ட சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அத்துடன், கெபிதிகொல்லேவ பகுதியில் உலர் உணவு விநியோகம் தொடர்பாக முறைப்பாடு பெறப்பட்டதாக பொலிசார் குறிப்பிட்டனர்.
பொலன்னறுவையில் ஒரு பகுதியில் புதிய தெருவிளக்குகள் பொருத்தப்படுவதாகவும், மொனராகலையில் வேட்பாளரின் படம் காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
Link : https://namathulk.com