எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி கனடாவில் பொதுத்தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்றையதினம் ஒட்டாவாவில் செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அமெரிக்கா நம்மை சொந்தமாக்கி கொள்ள விரும்புவதாகவும் அதனை நடக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டார்.
கடந்த வாரம் கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Link : https://namathulk.com