தலதா வீதி உலா தொடர்பில் பகிரப்படும் தகவல் தவறானது – தலதா மாளிகை நிருவாகம்

Rajan
By
0 Min Read
தலதா பெரேரா

கண்டி,தலதா வீதி உலாவிற்கு நன்கொடைகள் கோரி வாட்ஸ்அப்பில் பரவலாக பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானது என்று தலதா மாளிகை நிருவாகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

தலதா மாளிகைக்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசாங்கத்துடன் இணைந்து வழங்கப்படுகின்றன.

எந்தவொரு தனிநபர், குழு அல்லது அமைப்பும் தனது சார்பாக நிதி சேகரிக்கவோ அல்லது தொடர்புடைய நிறுவன நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ ​​அதிகாரம் அளிக்கவில்லை எனவும் குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற தவறான செய்திகளைப் புறக்கணிக்குமாறும், துல்லியமான தகவல்களுக்கு தலதா மாளிகையின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளை நாடுமாறும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *