பங்களாதேஷ் அணியின் முன்னாள் அணித்தலைவரான தமீம் இக்பால் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷில் தற்போது டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது.
குறித்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் முகமதின் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் ஷைன்புகூர் கிரிக்கெட் கிளப் ஆகிய அணிகள் மோதின.
இந்த போட்டியின் போது தமிம் இக்பாலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மைதானத்துக்கு விரைந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
மேலும் விமானம் மூலம் தமிம் இக்பாலை டாக்காவிலுள்ள மருத்துவமனைக்குக் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.
எனினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டதுடன் பாசிலதுன்னேசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link : https://namathulk.com