மக்களுக்கு நிதி தொடர்பான அறிவு இல்லாமையே பிரமிட் மோசடிகளுக்கு காரணம் – மத்திய வங்கியின் ஆளுநர்.

Rajan
By
1 Min Read
மத்திய வங்கியின் ஆளுநர்

பெரும்பான்மையான மக்களுக்கு நிதி தொடர்பான அறிவு இல்லாமையினாலேயே பிரமிட் போன்ற மோசடிக்குள் பலர் சிக்கிவருவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார.

இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் புதிய தொழிநுட்ப சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

கையில் பணம் இருந்தாலும், அது தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும், மோசடிக்கு ஆளாக நேரிடுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டார்.

சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி, முதலீடு என்ற போர்வையில் மோசடியாகப் பணத்தைப் பெற்று, பின்னர் அந்தப் பணத்தை பிரமிட் திட்டங்களிலோ அல்லது அங்கீகரிக்கப்படாத வைப்புத்தொகைகளிலோ வைப்பதன் மூலம் பணத்தை இழக்கும் போக்கு உள்ளதாக ஆளுநர் கூறினார்.

இந்த நிலையில் மக்களின் நிதி அறிவை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *