மூதூர் பிரதேச சபையின் கீழ் உள்ள மல்லிகைத்தீவு உப அலுவலக வளாகத்திற்குள் இன்று திங்கட்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளன.
இதன்போது பயன்தரும் வாழை மரங்கள், தென்னை மரங்கள் காட்டு யானைகளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளன.
தற்போது நெல் அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
இதனால் யானை பாதுகாப்பு வேலி அமைத்துத்தர வேண்டுமெனவும், தொடர்புடைய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Link : https://namathulk.com