காசா மீது வான்வழி தாக்குதல் – குழந்தைகள் உட்பட 23 பேர் பலி!

Ramya
By
1 Min Read
GAZA

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், 7 குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

எட்டாவது நாளாக இன்று அதிகாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பல்மைரா நகருக்கு அருகிலுள்ள இரண்டு சிரியா விமானப்படை தளங்கள் மீது குறித்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுவரையில், காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 50 ஆயிரத்து 82 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 408 பேர் காயமடைந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு அன்மையில் தெரிவித்திருந்தது.

இடிபாடுகளுக்குள் சிக்குண்டு ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *