தேர்தல் காலத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்த தகவல்களை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.
இதன்படி, அமைச்சுக்களும், அரசுத் துறைகளும் தொடர்புடைய திட்டங்கள் தொடர்பான தகவல்களை மறுஆய்விற்காக தேர்தல் ஆணைக்குழுலவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதற்கமைவாக, குறித்த அபிவிருத்தி திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்தல் காலத்தில் அவை தொடர்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு கூறியுள்ளது.
மேலும், இந்தத் திட்டங்களில் ஏதேனும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டால், தேர்தல் முடியும் வரை அவற்றை ஒத்திவைக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Link : https://namathulk.com