மகாபொல உதவித்தொகை பெறுவோருக்கு அந்தக் கொடுப்பனவை தாமதமின்றி வழங்குவது தொடர்பாக எடுக்கக்கூடிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தலைமையில் இசுருபாய கல்வி அமைச்சின் வளாகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இங்கு, 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மகாபொல கொடுப்பனவு கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை குறைக்க எடுக்கக்கூடிய குறுகிய கால நடவடிக்கைகள் மற்றும் ஏனைய ஆண்டு மாணவர்களுக்கு மகாபொல கொடுப்பனவை தாமதமின்றி வழங்குவது தொடர்பாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், நீண்ட கால திட்டமாக மகாபொல உதவித்தொகை பெறுவோருக்கான கணினிமயமாக்கப்பட்ட தரவு முறையை நவீனமயமாக்குவது தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
Link : https://namathulk.com