ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் இணைய சேவை திட்டம் நாட்டில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மறுத்துள்ளது.
இந்த சேவை ஏப்ரல் மாதத்தில் தனது செயல்பாடுகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும்;, டேஷ்போர்ட் எனப்படும் ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பை செயல்படுத்துவதால் தாமதம் ஏற்பட்டதாகவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய இயக்குநர் ஜெனரல் பந்துல ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஸ்டார்லிங்க் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
link: https://namathulk.com