அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதியை தள்ளுபடி விலையில் வழங்க தீர்மானம்.

Aarani Editor
1 Min Read
தள்ளுபடி விலை

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதியை தள்ளுபடி விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பருவகால உணவுப் பொதியை ரூ 2,500 க்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அஸ்வேசும சலுகைகளைப் பெறுவதற்காக புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த 812,753 வேட்பாளர்களிடமிருந்து பொருத்தமான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைவாக, 2025-04-01 முதல் 2025-04-13 வரை நாடு முழுவதும் அமைந்துள்ள லங்கா சதோச விற்பனை நிலைய வலையமைப்பு மற்றும் ஊழுழுPகுநுனு விற்பனை நிலையங்கள் மூலம் பயனாளிகளுக்கு உணவுப் பொதி வழங்கப்படும்.

இதேவேளை, தென்னை விவசாயிகளுக்கு இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் 50 கிலோகிராம் உரப் பொதியை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *