தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா மீது இன்றையதினம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளன.
தாய்லாந்தில் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா (Paetongtarn Shinawatra ) தலைமையிலான பியூ தாய் கட்சி ஆட்சி நடைபெறுகிறது.
இந்நிலையில் தாய்லாந்தில் அண்மைகாலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.
இதற்கு பேடோங்டார்னின் தந்தையும், முன்னாள் பிரதமருமான தக்சின் ஷினவத்ரா அரசாஙகம், நிர்வாகத்தில் செல்வாக்கு செலுத்துவதே காரணம் என எதிர்க்கட்சி தலைவர் நத்தபோங் ருயெங்பன்யாட் குற்றம்சாட்டி வந்தார்.
இந்தநிலையில் பேடோங்டார்ன் மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளன.
இதன்மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link: https://namathulk.com/