இராணுவ புலனாய்வுப் பணியாளர்கள் தொடர்பான ரகசியத் தகவல்களை வெளியிட்ட முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் : உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

Aarani Editor
1 Min Read
முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர்

இராணுவ புலனாய்வுப் பணியாளர்கள் தொடர்பான ரகசியத் தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொலவை கொழும்பு உயர் நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 02, 2002 அன்று அதுருகிரிய மில்லினியம் சிட்டி வீட்டுத் திட்டத்தில் இராணுவப் புலனாய்வுப் பணியாளர்கள் பயன்படுத்திய ஒரு பாதுகாப்பான வீட்டைச் சோதனையிட்டு, இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களின் இரகசிய நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வெளியிட்டதன் மூலம் தேசிய பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாக முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கொழும்பு உயர் நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய படபென்ட்கே இந்த தீர்ப்பை வழங்கினார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *