காணாமல் போனோர் அலுவலகத்தில் இராணுவத்திற்கு எதிராக 3742 விண்ணப்பங்கள் பதிவு

Aarani Editor
1 Min Read
ஓஎம்பி

காணாமல்போனோர் தொடர்பில் இதுவரை ஓஎம்பி அலுவலகத்தில் சுமார் 23, 352 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அதில் 3,742 முறைப்பாட்டு விண்ணப்பங்கள் முப்படையினர் தொடர்பில் கிடைக்கப்பெற்றதாக ஓஎம்பி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் நல்லூர் பிரதேச செயலகத்தில் ஓ எம் பி அலுவலகப் பிரதிநிதிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையே இடம் பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

ஓஎம்பி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற 23,352 முறைப்பாடுகளில் 16,966 முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

2000ஆம் ஆண்டுக்கு முன்னர் 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் என இரண்டு முக்கிய காலகட்டங்களை அடிப்படையாக வைத்து குறித்த விசாரணைகள் இடம்பெற்றன.

2000 ஆண்டுக்கு பின்னர் 7,406 விண்ணப்பங்களும் 2000 ஆண்டுக்குப் பின்னர் 9,560 விண்ணப்பங்களும் கிடைக்கப்பெற்றன.

6,449 முறைப்பாட்டு விண்ணப்பங்கள் பூர்வாங்க விசாரணைக்கு முடிவுறுத்தப்பட்டு 2,604 காணாமல் போன சான்றிதழ்களும் 437 மரணச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளதாக ஓஎம்பி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *