சட்டவிரோத மீன்பிடியை தடுத்து கடல் வளத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

Aarani Editor
0 Min Read
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

சட்டவிரோத மீன்பிடியை தடுத்து கடல் வளத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மீன்பிடி திணைக்களத்திற்கு இன்று மேற்கொண்ட விஜயத்தின் போதே அவர் இதனை கூறினார்.

இதன்போது, மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், ஆற்றை ஆழப்படுத்துதல், களப்பு இறங்குதுறை அமைத்தல், புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கூடிய அளவிலான மீன்பிடி வசதிகளை ஏற்படுத்தல், சட்டவிரோத மீன்பிடி வலைகளை தடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *