வடக்கு , கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கு அதியுயர் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
அதற்கமைய வடக்கு, வடமத்திய, வடமேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவித்தல் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Link: https://namathulk.com