களுத்துறை – பதுரலிய பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட துப்பாக்கி

Aarani Editor
0 Min Read
துப்பாக்கி

களுத்துறை பதுரலிய பொலிஸ் பிரிவின் கெலின்கந்த வீதியில் உள்ள ஒரு இடத்தில் புதைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (27) மாலை தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது குறித்த இடத்தில் புதைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி, 2 வெடிமருந்துகள் மற்றும் 5 தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த இடத்தில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்களைக் கைது செய்ய களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *