பிரசன்ன ரணவீரவின் மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Aarani Editor
1 Min Read
பிரசன்ன ரணவீர

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரிய மனுவைத் தொடரலாமா, வேண்டாமா? என்பது தொடர்பான உத்தரவு எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனுவை இன்று (28) பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

களனி பகுதியில் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்தை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, தான் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *