மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிரான சில சட்டத் தீர்ப்புகளைத் தொடர்ந்து, ஷிராணி பண்டாரநாயக்க மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பாராளுமன்ற குழுவின் பரிந்துரையின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், 2013 ஜனவரியில் அவர் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்தநிலையில் கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அந்த நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தான் இருந்ததாகக் கூறினார்.
தற்போதைய அரசாங்கம் நாம் செய்த அதே தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது எனவும் அவர்கள் அதை மீண்டும் செய்தால், அது சரியாக இருக்காது எனவும் இதுபோன்ற தவறான தீர்மானங்களுகான விலையை தமது கட்சி இன்னும் செலுத்தி வருகிறது,” என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Link : https://namathulk.com