பயணிகளின் கோரிக்கைக்கமைவாக, ரயில்வே திணைக்களம் ‘கலிப்சோ ரயிலை’ நானுஓயா வரை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
பதுளை ரயில் நிலையத்திலிருந்து பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு கலிப்சோ ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வந்தன.
இதன்படி, ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பதுளையிலிருந்து நானுஓயாவிற்கு இந்த ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்தார்.
Link : https://namathulk.com