கிராண்ட்பாஸில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது.

Ramya
By
0 Min Read
ஐஸ் போதை

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பராக்கிரம வீதி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று இரவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வெல்ம்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேக நபர்களிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபா பணம் என்பன பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *