தலைமன்னார் கடற்பரப்பில் மிதந்து வந்த சுமார் 49 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகள் மீட்பு.

Ramya
By
0 Min Read
கேரளா கஞ்சா

தலைமன்னார், மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடைப்பட்ட கடற் பகுதியில் கடற்படையினர் நேற்று மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

சுமார் 124 கிலோ ஈரமான எடையுடன் குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.

இதன் மதிப்பு 49 மில்லியன் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என தெரியவந்துள்ளது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *