கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிக வெப்பமன வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று வெப்பமான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் அதிக வெப்பம் நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பகல் நேரங்களில் வெயிலில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
அத்துடன், கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும்படியாகவும், வெள்ளை அல்லது வெளிர் நிற ஒளி ஆடைகளை அணியமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com