மன்னார் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகளை சந்திக்கும் வகையிலும், இளைஞர்கள் விளையாட்டு துறை சார்பாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராய்வதற்கான விஜயத்தினை இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே மேற்கொண்டிருந்தார்
மன்னார் பள்ளிமுனை விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் மன்னார் மாவட்ட விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்
குறித்த சந்திப்பின் போது நீண்ட காலமாக கட்டுமான பணிகள் பூர்த்தி செய்யப்படாது காணப்படுக்கின்ற நறுவிலிக்குளம் சர்வதேச விளையாட்டு மைதான பணிகளை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
Link : https://namathulk.com