யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏழாலை தெற்கை சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கந்தரோடை பகுதியில் வேகமாக பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியமையால் விபத்து இடம்பெற்றதாக பொலிசார் கூறினர்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
Link : https://namathulk.com