ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவரை கண்டித்த விவகாரம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசாரால் கைது செயப்பட்ட ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவியின் பிழையான செயற்பாடு காரணமாக அவரை நல்வழிப்படுத்தும் வகையில் கண்டித்த ஆசிரியருக்கு எதிராக மாணவியின் தாயாரால் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நேற்று முன் தினம் கைது செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் பொலிஸ் காவலில் தடுத்து வைத்தனர்.
இதனையடுத்து, குறித்த ஆசிரியரை நேற்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பொலிசார் முற்படுத்தியிருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷாந்தன் பொன்னுத்துரை, ஆசிரியரை சரீர பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
Link : https://namathulk.com