இலங்கை கடற்பகுதிக்குள் இழுவை மடியுடன் வரும் இந்திய மீனவர்கள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் : ஊடக பேச்சாளர் அண்ணராச தெரிவிப்பு.

Aarani Editor
1 Min Read
மீனவர்கள்

இலங்கை கடற்பகுதிக்குள் இழுவை மடியுடன் வரும் இந்திய மீனவர்கள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் இல்லையே சட்டம் தன் கடமையை செய்யும் என்பதில் மீனவர்கள் தெளிவாக உள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அண்ணராச தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

இதன்போது, இலங்கை வருகை தந்துள்ள தமிழக மீனவர் குழு மீனவர்களுடனும் வடக்கு அரசியல் பிரமுகர்களுடனும் பல்வேறு சந்திப்புக்களை மேற் கொண்டுள்ள நிலையில் இந்திய மீனவர்கள் குழு சுகந்திரமாக யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம் என ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

இலங்கை கடற்பரப்பில் சுகந்திரமாக மீன்பிடியில் ஈடுபட்டு எதிர்கால சந்ததிக்கு இந்த கடலை வழங்க வேண்டும் என்பதே மீனவர்களின் தேவை எனவும் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தமிழக மீனவர்களுடனான சந்திப்பில் பல்வேறு விடயங்களை கலந்துரையாடியுள்ளதாகவும், அதற்கு பலர் ஆதாரவு வழங்கியுள்ளதாகவும் ஏடக பேச்சாளர் கூறினார்.

மேலும், இம்முறை ஒரு தரப்பு தமிழக மீனவர்களுடனேயே கலந்துரையாடல் இடம்பெற்றதொடு, எதிர்காலத்தில் நாகபட்டினம், காரைக்கால், தொண்டி போன்ற மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுடனும் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாகவும் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *