உள்ளூராட்சி தேர்தல்: அதிகாரப்பூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் ஏப்ரல் 16 ஆம் திகதி ஆரம்பம்.

Aarani Editor
1 Min Read
உள்ளூராட்சி தேர்தல்

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் ஏப்ரல் 16 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 20 மற்றும் 27 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளும் வாக்குச்சீட்டு விநியோகிப்பதற்கான சிறப்பு நாட்களாக நியமிக்கப்படும் எனவும், இந்த செயல்முறை ஏப்ரல் 29 ஆம் திகதி வரை தொடரும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, தேர்தல் ஆணைக்குழு அதிகாரப்பூர்வ வாக்குச்சீட்டுகளை விநியோக நோக்கங்களுக்காக ஏப்ரல் 16 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளது.

இதற்கிடையில், உள்ளூராட்சி தேர்தலுக்கான தகால்மூல வாக்குச்சீட்டுகள் ஏப்ரல் 7 ஆம் திகதி தபால் நிலையங்களுக்கு வழங்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த நடவடிக்கைகள் விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *