கடந்த வெள்ளிக்கிழமை தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பில் மிகுந்த வருத்தமடைவதாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து வெளியுறவு அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கடிதத்தில், நிலநடுக்கத்தால் பல உயிரிழப்புக்கள் மற்றும் குறிப்பிடத்தக்க அழிவு ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த கடினமான நேரத்தில் இலங்கை, தாய்லாந்து அரசாங்கத்துடனும் மக்களுடனும் துணை நிற்கிறது.
உயிரிழப்புக்களை சந்தித்த குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிராத்திக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com