மன்னாரை தென்னிந்தியாவுடன் இணைக்கும் புதிய திட்டம்.

Aarani Editor
1 Min Read
இந்தியப் பிரதமர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் விஜயம் ஏப்ரல் 4 முதல் 6 வரை இடம்பெறவுள்ளது.

இந்த விஜயத்தின் போது, இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைசாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக, மன்னாரை தென்னிந்தியாவுடன் கடலுக்கடியில் கேபிள் மூலம் இணைப்பது தொடர்பிலான ஒப்பந்தமொன்றும் கைசாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதற்கமைவாக, இந்த முயற்சி இலங்கையை ஒரு எரிசக்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அத்துடன், இந்தியா மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கு அதிகப்படியான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஏற்றுமதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயற்படுத்தப்படவதாகவும் அமைச்சர் கூறினார்.

Link: https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *