இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் பால் சார்ந்த உணவுகளின் விலைகள்.

Aarani Editor
1 Min Read
விலை

பால் தேநீரின் விலை மற்றும் பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் ஆகியவற்றின் விலைகள் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்‌ஷன் தெரிவித்துள்ளார்.

பால் மாவின் விலை அதிகரிப்பால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.

பால் மாவின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பால் தேநீர் தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அனைத்து வகையான பழச்சாறுகளின் ஒரு கோப்பையின் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவாக அதிகரிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சீஸ், கொத்து உள்ளிட்ட பல வகையான உணவுப் பொருட்களின் விலையும் 10 ரூபாவால் உயர்த்தப்படும் என்று சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *