குற்றவியல் சட்டமூலம் ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – ஜனாதிபதி.

Aarani Editor
1 Min Read
ஜனாதிபதி.

சட்டவிரோத வழிமுறைகள் மூலம் அரசாங்கம் ஈட்டிய சொத்துக்களை மீட்பதற்கான குற்றவியல் சட்டமூலம், ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மாத்தறை வெலிப்பிட்டி பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

இதன்போது, மோசடி செய்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகள் மீண்டும் நாட்டை ஆள அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்துடன், பொருளாதார நெருக்கடி காரணமாக கைவிடப்பட்ட வெளிநாட்டு உதவியின் கீழ் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்கள் மீண்டும் தொடங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சொத்துக்களைக் கண்டறிந்து, முடக்கி, பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு குறித்த மசோதா அதிகாரமளிப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *