கடந்த 22ஆம் திகதி கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணிபுரிந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை சிலர் பரப்பி வருவதாக பொலிசார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானவை என குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சமூகவலைதளங்களில் பரவும் தகவல்கள் சரியானவையல்ல எனவும் இதனால் சமூகத்தில் தவறான தகவல்கள் பரவாமல் தடுப்பது இலங்கை பொலிஸாரின் பொறுப்பு எனவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த விசாரணையில் இச்செயலை மேற்கொண்ட இளைஞன் குறித்த தகவல்களின் அடிப்படையில் ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தாண்டி கடும்போக்காளர் எனத் தெரியவந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இச்சந்தேக நபரின் செயற்பாடுகள் தொடர்பில் நீண்டகாலமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இணையப் பாவனை மற்றும் ஏனைய முறைகளை பாவித்தமையினால் சில மன உந்துதல்களுக்கு உள்ளானவர் என அவதானிக்கப்பட்டுள்ளதால்இதனடிப்படையில், மதவெறியில் ஈடுபட்டமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரின் கணினி வன்பொருள், தகவல் தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் தொடர்பான தடயவியல் விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Link : https://namathulk.com