புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் தொழுகைகள் இடம்பெற்றன.
இதன்படி, யாழ்ப்பாணத்தில் நோன்புப் பெருநாள் கிடல் தொழுகை ஜின்னா மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது, பலஸ்தீன் மக்களுக்காக கண்ணீர் மல்க துஆ பிரார்த்தனை செய்யப்பட்டது.
அத்துடன், காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனியர்களுக்கு நீதி வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Link : https://namathulk.com