பேரழிவு ஏற்பட்டுள்ள மியான்மார் மற்றும் தாய்லாந்தின் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ இலங்கைப் படைகளை அனுப்புவது குறித்து உடனடியாக ஆலோசித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை தான் கேட்டுக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தள பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தனது பொறுப்பை வெறும் அறிக்கைகளுடன் மட்டுப்படுத்தாமல், இந்த நெருக்கடியான நேரத்தில் உதவ முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மியான்மர் மற்றும் தாய்லாந்துடன் நாங்கள் எப்போதும் துணை நிற்போம் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Link: https://namathulk.com