சொந்தமில்லாத வீட்டுக்கு அரச இழப்பீட்டை பெற்ற ராஜபக்ச குடும்பம் : ஜனாதிபதி தெரிவிப்பு

Aarani Editor
1 Min Read
ஜனாதிபதி

2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் திகதி நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது, அழிக்கப்பட்ட மொனராகலை செவனகல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு ராஜபக்ச ஒருவர் இழப்பீடு பெற்றதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நஷ்ட ஈடு பெற்ற ராஜபக்ச யார் என்பது தொடர்பில் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட வீடு, இழப்பீட்டை பெற்ற ராஜபக்சவுக்குச் சொந்தமானது அல்ல என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

காணி உறுதி வேறு ஒருவரின் பெயரில் காணப்படுவதாகவும், வீடு மற்றொருவரின் பெயரில் உள்ளதாகவும், இழப்பீடு ராஜபக்ச ஒருவரால் பெறப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல்கள் அடங்கிய அறிக்கை அண்மையில் தனக்குக் கிடைத்ததாகவும், அது இதுவரையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *