மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு.

Aarani Editor
0 Min Read
சடலம்

தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் மற்றும் பொது மக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

டயகம, போட்மோர் பகுதியை சேர்ந்த 22 வயது யுவதியொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

மீட்கப்பட்ட சடலம் விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போய் இருந்த நிலையில் குறித்த யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *