நீர்கொழும்பில், சிகிச்சைப்பெற வந்த இளம் பெண்ணுக்கு வைத்தியரால் பாலியல் துன்புறுத்தல்

Aarani Editor
1 Min Read
வைத்தியரால் பாலியல் துன்புறுத்தல்

நீர்க்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்த இளம் பெண்ணொருவர், அங்குள்ள வைத்தியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட இளம் பெண், சிகிச்சை பெறுவதற்காக வந்தபோது, சம்பந்தப்பட்ட வைத்தியர் பாலியல் துன்புறுத்தலை மேற்கொண்டதாக அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்ட வைத்தியர் தமது சங்கத்தின் உறுப்பினராக இருந்து நீக்கப்பட்டவர் என இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளரான வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு, உடனடியாக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஊடகப் பேச்சாளர் கூறினார்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *