இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சில நிமிடங்களுக்கு முன்பு நாட்டை விட்டு புறப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பிற்பகல் ஒரு ரயில் பாலத்தை இந்தியப் பிரதமர் திறந்து வைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தனது விஜயத்தின் போது தனக்கு வழங்கப்பட்ட அன்பிற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் அவர் மிகவும் நன்றியுள்ளவராக இருப்பதாக பிரதமர் மோடி தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாச்சார, ஆன்மீக மற்றும் நாகரிக உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
Link: https://namathulk.com