மகன் தாக்கியதில் தாய் மரணம் : வாழைச்சேனையில் சம்பவம்.

Aarani Editor
0 Min Read
மரணம்

பெண்ணொருவர் தனது வீட்டு வளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவலடி -கேணிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாசகம் பெற்று வாழ்ந்து வரும் 65 வயது மதிக்கத்தக்க தாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது தாயுடன் வாழ்ந்து வந்த, மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தாக்கி குறித்த தாய் மரணமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில், மகனை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Link: https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *