தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கையின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இதன்போது, இலங்கை சென்ற பிரதமர் மீனவர் பிரச்சனை தொடர்பாக எந்த முன்னெடுப்பும் எடுத்ததாக தெரியவில்லை என முதலமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், இலங்கை கடற்படையால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது வருத்தமளிப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.
மேலும், 97 மீனவர்களும் அவர்களின் படகுகளும் மீண்டும் தாயகம் திரும்பும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாதது ஏமாற்றமளிப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்த போதிலும் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் தொடர்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
Link: https://namathulk.com