இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 850 கிலோ போதைப் பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நீண்ட நாள் படகில் மிகவும் சூட்சுமமாக மறைத்து கடத்தி வரப்பட்ட போதைப் பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களில் 191 கிலோ ஹெரோயின் மற்றும் 657 கிலோ ஐஸ் ரக போதைப் பொருள்கள் இருப்பதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
இவற்றை கடத்தி வந்த 7 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Link: https://namathulk.com