இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் – விளக்கமளிக்கும் ஜனாதிபதி.

Aarani Editor
0 Min Read
MODI JI

ஏற்கனவே நடைபெற்று வரும் நடவடிக்கைகளை நெறிப்படுத்தி முறைப்படுத்தும் நோக்கத்துடன் இந்தியாவுடன் சமீபத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

காலியில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, ஜனாதிபதி இதனை கூறினார்.

இந்தியாவுடனான கூட்டு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி அமர்வுகள் ஏற்கனவே நடந்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தியாவுடனான சமீபத்திய பாதுகாப்பு ஒப்பந்தம் இந்த தொடர்ச்சியான நடவடிக்கைகளை முறைப்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

அத்துடன், பிராந்திய பாதுகாப்பின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *