உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு.

Aarani Editor
1 Min Read
AL results

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர கூறுகிறார்.

பரீட்சை முடிவுகள் குறித்து ஊடகங்கள் வினவியபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

இம்முறை பரீட்சைக்கு மொத்தம் 333,183 மாணவர்கள் தேர்வெழுதினர், அவர்களில் 253,390 பேர் பாடசாலை மாணவர்கள் மற்றும் 79,793 பேர் தனியார் பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இந்தத் தேர்வு நவம்பர் 25 முதல் டிசம்பர் 31, 2024 வரை நாடு முழுவதும் 2,312 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

உயர்தரப் பரீட்சையின் உயிரியல் அமைப்புகள் தொழில்நுட்பம் (66) பாடத்திற்கான நடைமுறைத் தேர்வுகள் 2025 பெப்ரவரி 08-10 வரை நடைபெற்றன.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *